வாசிங்டன், ஜூன் 8- அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது.
குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாண வர்கள் சேர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இதனை செயல்படுத்தாததால் அந்த பல்கலைக்கழகத்துக்கு வழங்கப் பட்ட நிதியுதவியை நிறுத்துவதாகவும் அவர் அறிவித்தார்.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக் கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசா ரணை நடைபெற்று வரும் நிலையில் வெளிநாட்டு மாணவர் கள் சேர விதிக்கப்பட்ட தடைக்கு பாஸ்டன் மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.