சென்னை, ஜூன் 8- அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 13ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வருகிற 13ஆம் தேதி வரை இணை இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
தையல் தொழிற்நுட்பம் (1 வருடம்) 8ஆம் வகுப்பு தேர்ச்சி. கோபா (1 ஆண்டு) 10ஆம் வகுப்பு தேர்ச்சி. கட்டடப் பட வரைவாளர் (2 ஆண்டுகள்) 10ஆம் வகுப்பு தேர்ச்சி. ஸ்டேனோகிராபி (தமிழ், ஆங்கிலம்) (1 ஆண்டு) 10ஆம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு – 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.