இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்!

2 Min Read

உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் – மணமகள் உள்பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலை

லக்னோ, ஜூன் 25 உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் – மணமகள் உள் பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மெயூன்புரி மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். 28 வயதான இவர் திருமணமாகி டில்லி அருகே நொய்டாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிவ்வீரின் தம்பி சோனுவுக்

கும் (21), சோனி (20) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் (23.6.2023) திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மனைவி டோலியுடன் சிவ்வீர் சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் புதுமண இணை யர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த சிவ்வீர், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு புதுமண இணையர் இருந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தம்பி சோனு மற்றும் தம்பியின் மனைவி சோனி ஆகியோரின் கழுத்தில் கோடாரி யால் வெட்டினார். இதில் அவர்களது தலை துண்டானது. பின்னர் அங்கிருந்து வெளியே வந்த சிவ்வீர், பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த தனது மற்றொரு தம்பி புல்லான் (25), மைத்துனர் சவுரப் (23) குடும்ப நண்பர் தீபக் (20) ஆகியோரையும் தலையை துண்டித்துக் கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற தனது மனைவி டோலி (24), அத்தை சுஷ்மா (35) ஆகி யோரையும் சிவ்வீர் கோடாரியால் வெட்டினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து இந்தக் கொடூரத்தை அரங்கேற்றிய சிவ்வீர் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டோலி மற்றும் சுஷ்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

கொலை மற்றும் தற்கொலையின் பின்னணியிலான காரணங்கள் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுப்பற்றி காவல்துறையி னர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமண வீட்டில் புதுமண இணை யர் உள்பட 5 பேர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *