சண்டிகர், ஜூன் 7 அரியானா மாநிலத்தில் பேராசிரியர் பணிக்கான ஹிந்தி தேர்வில் வினாத்தாள் முழுவதுமே பிழையாக இருந்ததால் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது
ஹிந்தி பேராசிரியர் தேர்வு
அரியானா லோக் சேவா ஆயோக் (தேர்வாணையம்) (HPSC) மூலமாக கடந்த ஜூன் 1, 2025 அன்று ஹிந்தி பேராசி ரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்ட பெயர்கள் மற்றும் தலைப்புகள் முழுவதுமே பிழையாக வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பாரத ஹரிச்சந்திரா என்ற ஹிந்தி இலக்கிய நாடகத்தில் இருந்து கேட்கப்பட்ட மூன்று கேள்விகளிலும், ‘பாரத துர்தசா’ கெட்டகாலம் உருவாகிவிட்டது என்பது ‘பாரத்வாஜாஸ்ரம்’ பரத்வாஜஸ் என்ற பார்ப்பனர் ஜாதியாக தவறாக அச்சிடப்பட்டி ருந்தது.
பிரபல ‘பரீட்சா குரு’ நாவலின் பெயர் ‘பரிதா குரு’ என்றும், ‘ஆஷாட கா ஏக் தின்’ அமாவாசையின் முதல் நாள் என்ற நாடகத்தில் ‘வித்ருப்’ என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தை ‘விடப்’ என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வினாக்களில் வரும் வார்த்தைகளும் தவறாக வந்துள்ளன. ‘அல்ஸி என்பது ஹிந்தியில் சோம்பேறித்தனத்தை குறிக்கும் இதை ‘ஹாஸ்ய’ சிரிப்பு என்று மொழி பெயர்த்துள்ளனர்.
வினாத்தாள் முழுவதும் பிழை
‘அனிமா’ என்ற கதாப்பாத்திரத்தின் பெயர் என்பது ‘அதிமா’ என்றும் , ‘டாக்டர். மம்தா’ என்ற கதாப்பாத்திரத்தின் பெயர் ‘டாக்டர். மல்லிகா’, ‘ரோதக் என்ற அரியானா நகரின் பெயரை ‘ரோஹித் என்றும்’, ‘தந்தவீணோபதேசாச்சார்ய’ என்ற கதாப்பாத்திரத்தின் பெயரை ‘தீர்மோப தேசாச்சார்ய’, ‘லத்திகா’ என்பதை ‘நத்திகா’, ‘கிரிஷ் நேகி’ என்ற பெயரை ‘ஹரிஷ் நேகி’, ‘சீப் கீ தாவத்’ தலைவரின் விருந்து என்பதை ‘சீட் கீ தாவத்’ இருக்கையில் விருந்து என்றும், ‘சந்திரகலா’ என்பதை ‘சந்திரிகா’, ‘தா சாகப் என்ற அழைப்புச் சொல்லை ‘ஹிந்தியில் ‘தாதா சாகப்’, ‘ராவுல்வெல்’ என்பதை ‘ராவுத்பெல்’, என ஒட்டுமொத்த வினாத்தாளுமே பிழையாக இருந்தது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கல்வி கற்றுக் கொடுக்கும் சிறந்த பணியான பேராசிரியர் பணிக்கு நடை பெறும் தேர்வில் ஏனோதானோ என்ற அலட்சியப் போக்குடன் பிழையாக கேள்வித்தாளை தயாரித்த அறிவிலிகளின் பொறுப்பற்ற தன்மை தேர்வர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் உயர்கல்விக்கான பாடப்புத்த கங்களை மேற்கோள் காட்டியுள்ளதிலும் பிழைகள் இருந்தன.
எடுத்துக்காட்டாக ‘ஹிமாத்ரி துங் ஷ்ரிங் சே ப்ரபுத் சுத்த பாரதி – இமயமலையின் தனித்தன்மையோடு உள்ள இந்தியா என்ற பாடநூலின் பெயரை ‘தமாதர்ம தம்பீ ஷ்ரிங் சே, ப்ரபுத் சுத்த பாரதி’ என்று பொறுப்பற்ற தன்மையில் தவறாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல், கட்டுரையாக மாற்று தருக என்ற கொடுக்கப்பட்ட ஒரு ஹிந்தி கவிதை முழுவதுமே தவறாக இருந்தது.
தேர்வு ரத்து
இந்த தேர்வு 2024இல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நடைபெற வேண்டியது. இவ்வளவு கால தாமதத்திற்குப் பிறகும், தேர்வாணையம் இத்தகைய பிழைகள் நிறைந்த கேள்வித்தாளை வழங்கியது. தேர்வர்களை ஆத்திரமடைய செய்தது. தேர்வர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அரியானா தேர்வாணையம் தேர்வை ரத்து செய்து, விரைவில் மீண்டும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு மாநிலத்தின் முக்கிய தேர்வு ஆணையத்தின் அலட்சியத்தையும், அதன் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தொடர்கதை யாகி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு நடந்த காவலர்கள் பணிக்கான தேர்வில் கேள்வித்தாள் மிகவும் பிழையாக இருந்தது. இருப்பினும் அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்தி முடித்தது. பின்னர் ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் போன்றோர் சாமியார் அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து போராட்டம் அறிவித்த பிறகு தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தனர் இத னால் சுமார் 80 ஆயிரம் தேர்வர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.