ஆஸ்திரேலியா – மெல்ேபர்ன் நகரில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு 4-ஆவது மாநாடு நவம்பர் 1 – 2 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
பெரியார் சுயமரியாதை பன்னாட்டு 4-ஆம் மாநாட்டினை ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாடு ஆஸ்திரேலியாவிலுள்ள பெரியார் அம்பேத்கர் சிந்தனை மய்யம் (Periyar Ambedkar Thoughts Circle – PATCA) முன்னெடுப்பில் அமெரிக்காவிலுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் (Periyar International – USA) ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இம்மாநாடு 2025 நவம்பர் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பெரியார் சுயமரியாதை மாநாட்டிற்கு அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் பல அய்ரோப்பியா, ஆசிய நாடுகளிலிருந்து மனிதநேய, பகுத்தறிவாளர்கள் மிகப் பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலிருந்தும் கணிசமான அளவில் பேராளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பெரியார் சுயமரியாதை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று பெரியாரின் சுயமரியாதை தத்துவம் பற்றிய விளக்கவுரையினை – பெரியார் சிந்தனைகளை உலகமயப்படுத்திடும் வகையில் பேருரை ஆற்றிட உள்ளார்.
மாநாட்டிற்கு பின் சுற்றுலா
மாநாடு நிறைவு பெற்றபின்னர், ஒரு வார காலம் சுற்றுலாவாக ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன், கெயின்ஸ், சிட்னி ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வர திட்டம் உள்ளது.
மாநாட்டில் பங்கேற்றிடவும் சுற்றுலாவில் கலந்து கொள்ளவும் விருப்பம் உள்ள தோழர்கள் அவை குறித்த மேலும் விவரங்களை அறிந்திட அடியிற்கண்ட செல்பேசிகளில் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
வீ. குமரேசன் : + 91 88386 39737
ச. பிரின்சு என்னாரசு பெரியார் : + 91 94442 10999