சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் (வயது 89) சிறிது காலம் உடல்நலம் குன்றி, செஞ்சியில் அவரது மகள் கவனிப்பில் இருந்து வந்தவர், இன்று (6.6.2025) அதிகாலை 3.50 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு, மிகவும் துயரமும், துன்பமும் அடைந்தேன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, சமூகநீதி கண்ணோட்டத்தில் பல அருமையான தீர்ப்புகளை வழங்கியவர்.
சீரிய பகுத்தறிவாளர். எனது சகோதரர் – இறுதிவரை நட்புறவு பாராட்டிய பெரியார் பற்றாளர்.
கலைஞர் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் தலைவராக பல ஆண்டுகள் சிறப்போடு பணிபுரிந்த ஆற்றலாளர்.
முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஜஸ்டிஸ் ஜனார்த்தனம் அவர்கள், அரிய சட்ட ஆலோசனைகளை அளித்தவர். அருந்ததியர் இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தவர்.
கலைஞர் ஆட்சியில் அது செயலாகி, சட்டமாகி, இன்றுவரை தொடரும் நிலை உள்ளது!
தான் மறையுமுன், தனது குடும்பத்தவருக்கு சில முக்கிய கருத்துகளை எழுதி வைத்துள்ளதில்,
‘‘தனது இறப்பிற்குப் பின் எவ்வித மூட மதச் சடங்குகளையும் நடத்தக் கூடாது – தனது வாழ்விணையர் திருமதி அனுசுயா அவர்களின் உருவத்தில் எந்த மாற்றமும் இன்றி (தாலி அகற்றல் போன்றவை இல்லாமல்) சடங்குகளற்ற இறுதி நிகழ்வுகளை நடத்திட வேண்டும்’’ என்றும் விளக்கியுள்ளார்.
சட்டக் கல்லூரி விடுதியில் மறைந்த கழகப் பொருளாளர் கோ.சாமிதுரையுடன் தங்கி ஒன்றாகப் படித்து, பிறகு வழக்குரைஞர் தொழில் தொடங்கி, எங்களுடன் இணைந்து இருந்தவர் ஜனார்த்தனம் அவர்கள்.
பகுத்தறிவாளர் கழகத்தில் தொடங்கி யது அவரது வழக்கு ரைஞர் தொழில்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியவர்களின் பெருமதிப்பைப் பெற்றவர்.
அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டு மல்ல; சமூகநீதிப் போராளிகளுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்!
என்றாலும், பகுத்தறிவுவாதிகள், எதைத் தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்கத்தான் பழகிக் கொள்ளவேண்டும்.
அதன்படி, அவரது துணைவியார் அனுசுயா அம்மையாருக்கும், அவரது அருமைச் செல்வங் களான டாக்டர் அருள்மூர்த்தி, பொறியாளர் அருள்மகேஷ், டாக்டர் அருள்மலர் (சிங்கப்பூர்), டாக்டர் அருமைக்கண்ணு ஆகியோருக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் ஆறுதல் கூறுவதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூகநீதிக்காக அவர் ஆற்றிய தொண்டு,
அரசு மரியாதை பெறவேண்டிய தகுதிக்குரிய தாகும்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
தஞ்சை தலைவர்,
6.6.2025 திராவிடர் கழகம்