காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்: அய்.நா.வில் தீர்மானம்

2 Min Read

நியூயார்க், ஜூன் 6  காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி, அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

துப்பாக்கிச் சூடு

இஸ்ரேல் – காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதி கள் மற்றும் பிணைக் கைதி கள் இருதரப்பிலிருந்தும் விடு விக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழைவதையும் தடுத்தது. இதனால் காசாவில் உள்ள மக்கள் உணவுக்குப் போரா டும் நிலை ஏற்பட்டது. உணவு விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் இறந்தனர்.

இந்த நிலை தொடர்ந்ததால், காசாவில் உணவு பொருட்களை விநியோகித்த அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை அமைப்பு தனது பணியை நிறுத்தியது. இதையடுத்து, காசாவில் உடனடி போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, அய்.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

அதில், காசாவில் மனிதாபிபானம் மிக மோசமான நிலையை எட்டி யுள்ளதால், அங்கு உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள 21 லட்சம் பாலஸ்தீ னர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் வகையில் அனைத்து தடைகளையும் இஸ்ரேல் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

14 உறுப்பு நாடுகள் ஆதரவு

ஆனால், இதை நிபந்தனையாக கூறவில்லை. மேலும், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்ப டைக்க வேண்டும், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற அமெரிக்காவின் இரண்டு கோரிக்கைகளும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்படவில்லை. இந்த தீர்மானத்துக்கு அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்க மறுத்த ஹமாஸ் அமைப்பினர்

இஸ்ரேல் – காசா இடையே அமை தியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில கோரிக்கைகைளை ஹமாஸ் அமைப்பினர் ஏற்காததால், இஸ்ரேல்-காசா இடையேயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதில் சிக்கல் தொடர்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *