புதுச்சேரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்

1 Min Read

புதுச்சேரி, ஜூன் 5- புதுச்சேரியில் எதிர் வரும் 8.6.2025 ஞாயிறு மாலை நூற்றாண்டு நிறைவு விழாக் கருத்தரங்கம் நடை பெறவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக புதுவையில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், இயக்கப் பற்றாளர்கள் ஆகியோரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர். துரை.சந்திரசேகரன் தலைமையில் நேரில் சென்று சந்தித்து விழா அழைப்பிதழ் வழங் கப்பட்டது. சிறப்பான இந்த விழாவில் பங் கேற்று சிறப்பிக்குமாறு அழைக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம், சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமானஇரா.சிவா, ஜினோ மாறன் பில்டர்ஸ் மேலாண்மை இயக்குநர்.ச. தங்கமணி மாறன் உட்பட பலரைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் தி.இராசா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *