புதுடெல்லி, ஜூன்.5- டிரம்ப் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது.
அமெரிக்க பல் கலைக்கழகங்களில் படிக்கும் வெளி நாட்டு மாணவர்களின் விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்காவில் படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத் தள பக்கத்தில் கூறியி ருப்பதாவது:-ஒன்றிய வெளியுறவு அமைச்சக தகவலின்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க 3 லட்சத்து 37 ஆயி ரத்து 630 இந்திய மாணவர் கள் அமெரிக்கா சென் றுள்ளனர். அமெரிக்கா வில் படிக்கும் மொத்த வெளிநாட்டு மாணவர் களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்திய மாணவர்கள் ஆவர்.
நிச்சயமற்ற எதிர்காலம்
அவர்களின் பெ ற்றோர் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தையோ, கடன் வாங்கியோ அவர்களின் படிப்புக்கு முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்ற மாணவர்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்தித்து உள்ளனர். இந்த ஆண்டு அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்களின் ஆசை யும் நிறைவேறாமல் போகலாம்.
மவுனம்
விசா நேர்காணலை நிறுத்தி, அதிபர் டிரம்ப் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தி உள்ளார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சரும் முற்றிலும் மவுனம் சாதிக்கிறார்கள். ட்ரம்பின் நடவடிக்கையால் இந்திய மாணவர்களும், அவர்களின் குடும்பத்தி னரும் எப்படி பாதிக்கப் படுகின்றனர் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அவர்கள் சொல்ல வில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.