குடியேற்றம், ஜூன் 5- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரு மாத கோடைக் கால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் மே மாதம் முழுவதும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 01-06-2025 அன்று மாலை 5 மணி அளவில் குடியேற்றம் பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் பி. தனபால் இவ்விழாவில் இணைப் புரை வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற அனைவரையும் குடியேற்றம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி. சாந்தகுமார் வரவேற்று புரட்சிப் பாடல்களை பாடினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஒரு மாத சதுரங்கப் பயிற்சி முகாம் குறித்த தகவல்களை தமது அறிமுக உரையில் குறிப்பிட்டு பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் பள்ளி மாணவர்களிடையே மூடநம்பிக்கைகள் ஏற்படுத்தக் கூடாது என்று பெற்றோர்களுக்கு பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை தமது தொடக்க உரையில் பேசினார். கழக மகளிரணி தோழர் ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிர் பாசறை தலை வர் ச.ரம்யா, நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட துனைச் செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.ராஜகுமாரி, கழனிப்பாக்கம் அமைப்பாளர் ரவீந்திரன், பகுத்தறிவாளர் கழக பற்றாளர்கள் வெ.ரா.நபீஸ் அகமத், ஆர்.ஆர்.ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி இயக்குனர் இர.நடராசன் ஆற்றிய சிறப்புரையில் பள்ளி மாணவர்கள் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், எதையும் அறிவியல் துணை கொண்டு மெய்ப்பொருள் காண வேண்டும் என்று தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வழக்குரைஞர் கே.எம்.பூபதி தந்தை பெரியார் சாதி மத பேதங்களை ஒழித்து சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பள்ளி மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் தந்தை பெரியாரை முழுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பயிற்சி முகாமில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சதுரங்கப் பயிற்சி பெட்டகம், சான்றிதழ், புத்தகப் பை மற்றும் பெரியார் பிஞ்சு இதழ்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். 55 மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். பெற்றோர்கள், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், மகளிர் அணி மற்றும் திராவிட இயக்க பற்றாளர்கள் உட்பட 130க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.முடிவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துனைச் செயலாளர் க.பரமசிவம் நன்றி உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் ஒரு மாத கோடைக் கால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் மே மாதம் முழுவதும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 01-06-2025 அன்று மாலை 5 மணி அளவில் குடியேற்றம் பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் ச.செந் தமிழ்யாழினி மாணவர்களுக்கு சதுரங்கப் பயிற்சி வழங்கி சிறப்பித்தார்.