இந்நாள் – அந்நாள்

1 Min Read

பெ. வரதராஜுலு (நாயுடு) பிறந்த நாள் இன்று (ஜூன் 4, 1887)

சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார்  மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை பெரியாரும், பெ. வரதராஜுலு நாயுடுவும் கடுமையாக எதிர்த்தனர்.

இது சமூக நீதிப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்றாகும். இருவரும் இணைந்து இந்தப் பாகுபாட்டிற்கு எதிராகப் போராடினர். இந்தச் சம்பவத்தை  காந்தியாருக்கும் கொண்டு சென்றனர்.

இருவரும் சிறந்த பேச்சாளர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதற்குப் பத்திரிகைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.  டாக்டர்  வரதராஜுலு நாயுடு, பெரியாரின் நண்பராகவும், சில போராட்டங்களில் அவருடன் இணைந்து செயல்பட்டவராகவும் இருந்தாலும், அவர்களின் அரசியல் மற்றும் சித்தாந்தப் பாதைகளில் சில முக்கிய வேறுபாடுகளும் இருந்துள்ளன. தந்தை பெரியார், டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் பொது வாழ்வுப் பங்களிப்பை மதித்தவர். தந்தை பெரியாருக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் குறிப்பிட்டவரும் அவரே!

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *