சாமியார்களின் யோக்கியதை! போதை லட்டு கொடுத்து ஆசிரமத்தில் வீராங்கனை கூட்டுப் பாலியல் வன்கொடுமை உ.பி. சாமியார்மீது வழக்கு

Viduthalai
1 Min Read

லக்னோ, ஜூன் 3 உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க உதவுவதாக அந்த பெண்ணுக்கு உறுதியளித்தார்.

இதற்காக நான்காயிரம் ரூபாய் கேட்ட அவர், ஆசிரமத்தில் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் கடைக்கு இடம் தருவதாகவும் கூறினார். அவரது வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட பெண், ஜனவரி 28 அன்று அந்த முதியவருடன் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அங்கு போதைப்பொருள் கலந்த லட்டுவை சாப்பிடக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட பிறகு சுயநினைவை இழந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

பின்னர், அந்த முதியவர், ஆசிரமத்தின் தலைமை சாமியார் மற்றும் இரண்டு பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பயந்துபோன அவர், இறுதியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தெற்கு துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் சாமியார்மீது முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு துணை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *