பெரியார் மீது எனக்குப் பொறாமை!

viduthalai
1 Min Read

நான் பெரியாரை அடிக்கடி சந்திக்கிற போதெல்லாம் “என்ன இரண்டு நாள்களாக உடம்பு சரியில்லையாமே” என்று கேட்டால், “ஆமா, இரண்டு நாளாக எனக்கு சுற்றுப்பயணம் இல்லை. அதனால் உடம்பு சரியில்லை” என்பார். எனக்கு அப்போது ஏற்படுகிற பொறாமைக்கு அளவேயில்லை. 93 வயதுக்கு பிறகு பெரியார் அவர்கள் நாட்டு மக்கள் நல்வாழ்வுக்காக, தன்மான வீரர்களாக தமிழர்கள் வாழ வேண்டும் என்பதற்காக ஊர் முழுக்க சென்று பிரச்சாரம் செய்கின்றார். இப்படி ஒருவர் தன்னை பாடாய்படுத்திக்கொண்டு நாட்டு மக்களுக்காக பணியாற்றுகிறார். நான் இங்கே பெரியார் தொண்டை குறிப்பிடுவதற்கு காரணம் நாம் வெற்றி பெற நமக்கு அடக்கம் தேவை.

(4.8.1971 சேலத்தில் கலைஞர்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *