‘‘இனி இந்த ரூபாய் நோட்டுகள் வராது” : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 1 நாடு முழுவதும் யூ.பி.அய். பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே ரூபாய் நோட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

முன்னதாக 2, 5, 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன. இதில் 2000 ரூபாய் நோட்டினை அரசே சந்தையில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால் 500 ரூபாய் நோட்டுகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி மொத்த மதிப்பின் அடிப்படையில், 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே சந்தைப் பங்கில் 86 சதவீத அளவில் உள்ளன. இந்தநிலையில் 2,5, 2000 ரூபாய் நோட்டுகளை இனி அச்சிட மாட்டோம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதேநேரம் சந்தையில் தற்போது போலியான 200, 500 ரூபாய் நோட்டு களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தாக ஆர்.பி.அய்.கவலை தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து போலி நோட்டுகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் போலி ரூபாய் நோட்டுகள் விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *