உத்தியோகங்களில், நாணயமும், ஒழுக்கமும் சர்வ சாதாரணமாய்க் கெட்டுப் போயிருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாள்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாகவே கருதுவதாலும், தாங்கள் செலவழித்த பணத்தை உத்தியோகங்களில் பெறப் பார்க்கிறார்கள். இது இயற்கையே என ஒருபுறம் கூறினாலும் இவ் இழி நிலையே காலமெல்லாம் நீடிக்கும் என்றால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’