103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 26 – வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை யின் மற்றுமொரு முன்னோடி முயற் சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன் னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வழக்கமான மருத்துவ ஆலோசனை களோடு, சிறப்புப்பிரிவு மருத்துவர் களைக் கொண்டு, தொற்று நோய் களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரி சோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏழை – எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனி யார் மருத்து வமனைகளும் இணைந்து நடத்தும் இந்த முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தப் பன்னோக்கு சிறப்பு மருத் துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல் படுத்தும் அமைச்சர்கள் – மருத்து வர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் பாராட்டுகள்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *