இன்று புகையிலை எதிர்ப்பு நாள்

viduthalai
1 Min Read

புவனேஸ்வர், மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை யில் கரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப் புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி, பத்மசிறீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார். சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *