இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் 44 ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.05.1981)
ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் சிங்கள வெறியர்களால் மே 31, 1981 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.
20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களாலும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களாலும், தாரா ளமான உதவியினாலும் வளர்ச்சி பெற்றிருந்த நூலகமாகும்.
அதன் அரை நூற்றாண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருந்தபோது மே 31, 1981 நள்ளிரவுக்குப் பின்னர் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டது.
இதன் கட்டடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழைமைவாய்ந்த கையெழுத்துப் படிகளும், பல்வகை ஆவணங்களும் திரும்பப் பெற முடியாதவை. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்கா உள்பட அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் கூட அடங்கியிருந்தனர்.
தமிழர்களின் அறிவுக்கருவூலமான நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தாங்க வொண்ணா தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் தமிழ்த் தேசிய உணர்வுகளை மேலும் தூண்டி விட்டது.
தங்களது வரலாற்றையே எரித்த சிங்கள வெறியர்கள்
இப்னு பதாதா என்ற மொராகோ பயணி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்தார். அவர் இலங்கை யில் 30 ஆண்டுகள் தங்கி இலங்கை சிங்களவர்கள் குறித்து அபூர்வமான பலதகவல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய முழுமையான தகவல்களை ஆங்கிலேய அரசாங்கம் நகல் எடுத்து பத்திரமாக வைக்க யாழ் நூலகத்தை தேர்ந்தெடுத்தது.
கையால் எழுதப்பட்ட நூல் லண்டன் அருங்காட்சி யகத்திலும், அதன் நகல் யாழ்ப்பானத்திலும் இருந்தது. தோல் மற்றும் மெல்லிய பதப்படுத்தப்பட்ட நாணலால் அரபு மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் உலகின் மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.
யாழ் நூலக எரிப்பின் போது இந்த நூல் பிரதியும் எரிந்து நாசமானது., அதில் அரபுமொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிமாற்றப்பட்ட நூல்களும் இருந்தன.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது உள்நாட்டுப் போர் முடிந்த பிறகே அவர்கள் தங்களின் வரலாற்றைக் கூறும் பழைமையான நூலையும் சேர்த்து எரித்ததை அறிந்து கொண்டனர். இன்றும் சிங்களவர்களும் யாழ் நூலக எரிப்பால் வேதனைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.