தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு ‘வாசிப்பு வாரம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனைமரத்தின் சிறப்பு என பல்வேறு தலைப்புகளில் கலந்துரை யாடவும், கதை சொல்லவும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.