தஞ்சாவூர், மே 29- தஞ்சை மாவட்ட கழக தோழர்கள் தஞ்சை பர்மா பஜாரில் புத்தக விற்பனை செய்தனர்.
அங்கு உள்ள கடைகளின் நிறுவனர்கள் தங்களை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதாக கூறி புத்தகங் களை மொத்தமாக வாங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
புத்தக விற்பனையின் போது உடன் மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகர செயலாளர் இரா.வீரகுமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத்தலைவர் ப.நரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.