இடி மேல் இடி பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் கிடையாதாம் ஒன்றிய பிஜேபி அரசின் மனித உரிமை விரோத செயல்

1 Min Read

புதுடில்லி, மே. 29- பொதுத்துறை நிறுவ னங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது.

முக்கிய திருத்தங்கள்

2021ஆம் ஆண்டின், ஒன்றிய சிவில் சர் வீசஸ் (ஓய்வூதியம்) விதி முறைகள், 2003ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.

ஆனால், ரயில்வே ஊழியர்கள், தற்செயல் மற்றும் தினக்கூலி தொழி லாளர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட் டோருக்கு பொருந்தாது.

இந்நிலையில், இந்த ஓய்வூதிய விதிமுறை களில் ஒன்றிய பணியா ளர் நலத்துறை அமைச்சகம் முக்கிய முக்கிய திருத்தங்களை செய்துள்ளது. திருத்தப் பட்ட ஒன்றிய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகள், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

மறுஆய்வுக்குட்பட்டது

அதில், “பொதுத்துறை நிறுவனங்களில் தவறான நடத்தைக்காக பணிநீக்கமோ அல்லது ஆட்குறைப்போ செய்யப்படும் ஊழியர்கள், தங்களது ஓய்வுகால பலன்களை இழக்க வேண்டி இருக்கும்.

இருப்பினும், அவர் களது பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு, அவர்களது பொதுத் துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது” என்று கூறப் பட்டுள்ளது.

நன்னடத்தை

மேலும், திருத்தப்பட்ட விதி முறைகளில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங் குவதும், நீடிப்பதும், சம்பந்தப்பட்டவரின் எதிர்கால நன்னடத் தையை பொறுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டாலும், ஓய்வு கால பலன்கள் பறிபோகாது என்ற நிலை இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *