Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?

Last updated: May 29, 2025 3:09 pm
Published May 29, 2025
தமிழ்நாடு
SHARE
Contents
பெங்களூரு மாநகராட்சிஏன் இப்போது?எது லாபம்?முதல் கட்டமாக…இரண்டாவது கட்டம்

கோவை, மே 29- தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் தனியார் நிறுவனங்கள் பங்குகள் வெளியிடுகின்றன. இந்த பங்குகள் வாங்குபவர்கள் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு உரிமையாளர்களாக மாறுவார்கள். அந்த நிறுவனம் லாபம் அடைந்தால், அதிலிருந்து டிவிடெண்ட் எனப்படும் பங்குத் தொகை வழங்கப்படுகிறது.

அதேபோல் ஒன்றிய-மாநில அரசுகள் பங்குச் சந்தையில் பங்குகள் அல்ல, பத்திரங்கள் மட்டுமே வெளியிடுகின்றன. இந்த பத்திரங்களை வாங்குபவர்கள், அரசுக்கு “கடன் கொடுப்பவர்கள்” ஆக உள்ளனர்.

பத்திரத்தின் அடிப்படையில், அரசுகள் ஆண்டுதோறும் வட்டியை கொடுத்து, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அசல் தொகையை திருப்பிச் செலுத்தும். இதன் மூலம் அரசு தனது வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும். ஆனால் இது நிறுவன பங்குகள் போல உரிமை கொடுக்கவில்லை, லாபப் பங்கு கொடுக்கவில்லை. மாறாக வட்டி மட்டும் தான் தருவார்கள்.

பெங்களூரு மாநகராட்சி

ஏற்கெனவே ஒன்றிய-மாநில அரசுகள் தொடர்ந்து அதிகளவு பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி வருகிறார்கள். அதே போல் உள்ளாட்சி அமைப்புகளும் பத்திரங்களை வெளியிட பங்குச் சந்தை ஆணையம் அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1997ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி பத்திரங்களை வெளியிட்டது.

Also read

தஞ்சாவூரில் இயக்க புத்தக விற்பனை பிரச்சாரம்
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

அதனைத்தொடர்ந்து ஆமதாபாத், காசியாபாத் போன்ற மாநகராட்சிகளும் பத்திரங்கள் வெளியிட்டன. தற்போது புனே, அய்தராபாத், இந்தூர், போபால், விசாகப்பட்டினம், ஆமதாபாத், சூரத், லக்னோ, காசியாபாத், வதோரா, ஆமதாபாத், ராஜ்கோட், பிம்பிரி சிஞ்ச்வாட் ஆகிய மாநகராட்சிகள் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.

மாநகராட்சிகள் மக்களுக்கு தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்கின்றனர். இவற்றுக்கு தேவையான நிதியை வங்கி கடன்களையே நம்பாமல், பங்குச் சந்தையில் நிதிப்பத்திரங்கள் மூலம் மக்கள் முதலீட்டைத் திரட்டுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி, தேசிய பங்குச் சந்தை மூலம் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.200 கோடியாகும்.

ஏன் இப்போது?

இந்த பத்திரங்களை வாங்குபவர்களுக்கு 7.97 சதவீத வட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும். 10 ஆண்டுகள் கழித்து அசல் தொகை அப்படியே திருப்பி தரப்படும். சென்னை மாநகராட்சியை தொடர்ந்து கோவை,திருச்சி, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளும் பத்திரங்கள் வெளியிடும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

மாநகராட்சிகளை பொறுத்தவரை தங்களது வருவாயை மட்டும் வைத்து கொண்டு பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ள முடி யாது. ஒன்றிய-மாநில அரசுகள் நிதி வழங்கினாலும் தனது பங்கினை மாநகராட்சிகள் செலுத்த வேண்டும். அதற்காக மாநகராட்சிகள், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகம் அல்லது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குகிறார்கள். ஆனால் இந்த கடனுக்கு அவர்களுக்கு அடமானம் கொடுக்க வேண்டும். மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே தான் கடனை தவிர்த்து தமிழ்நாடு மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் பத்திரங்கள் வெளியிட்டு மக்களிடம் நிதி திரட்டும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள்.

எது லாபம்?

சென்னை மாநகராட்சி பத்திரங்கள் மூலம் திரட்டி உள்ள ரூ.200 கோடி நிதிக்கு, 7.97 சதவீத வட்டி கணக்கீட்டின்படி 10 ஆண்டுகள் கழித்து வட்டி-அசலுடன் சேர்த்து ரூ.359 கோடியே 40 லட்சம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதே சென்னை மாநகராட்சி வங்கிகள் மூலம் ரூ.200 கோடி கடன் வாங்கினால் சராசரியாக அவர்களுக்கு 10 சதவீத வட்டி கணக்கீட்டின் 10 ஆண்டுகள் கழித்து வட்டி அசலுடன் சேர்த்து ரூ.400 கோடி திருப்பி வழங்க வேண்டும்.

முதல் கட்டமாக…

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.200 கோடி நிதி திரட்டி இருந்தால் சராசரியாக 4 சதவீத வட்டி கணக்கீட்டின் 10 ஆண்டுகள் கழித்து வட்டி-அசலுடன் சேர்த்து வெறும் ரூ.280 கோடி மட்டும் தான் திருப்பி வழங்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேம்பாட்டு கழகத்திடம் இருந்து மாநகராட்சி மிக அதிகளவு நிதி பெறமுடியாது. விரைவாகவும் பெற முடியாது எனவே தான் தமிழ்நாடு அரசு, மாநகராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து பத்திரங்கள் வெளியிட்டு மூலம் நிதி பெற அனுமதி தந்துள்ளது.

இரண்டாவது கட்டம்

சென்னை மாநகராட்சி தற்போது முதல்கட்டமாக ரூ.200 கோடி நிதியை பத்திரங்கள் வெளியிட்டு மூலம் திரட்டி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி ரூ.825 கோடி செலவில் பிராட்வே பஸ் நிலையத்தை மேம்படுத்தமுடிவுசெய்துள்ளது. இந்த திட்டப்பணிக்காக ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அரசின் அனுமதிக்கு பிறகே இது சாத்தியாகும். ஒருவேளை சென்னை மாநகராட்சி ரூ.500 கோடிக்கு பத்திரங்களை வெளியிட்டால், நாட்டிலேயே அதிக தொகை வெளியிட்ட மாநகராட்சி என்ற பெருமை சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும்.

 

Ad imageAd image

You Might Also Like

நவீன முறையில் கற்பித்தல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் விரைவில் அரசாணை

தமிழ்நாடு கடற்கரையில் அரிய கடல் புழு! கடலியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

தி.மு.க. எம்.பி.க்களின் முயற்சியால் 1354 தமிழ்நாடு மீனவர்கள் விடுவிப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனை கனிமொழி எம்.பி. அறிக்கை

TAGGED:ஆமதாபாத்வதோரா
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?