அசாம் மாநிலத்தில் பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

1 Min Read

திஷ்பூர், மே 29- அசாம் மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வெகுதூரத்தில் (Remote Area) உள்ள பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அசாம் மிகவும் மாறுபட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான மாநிலம். அசாமின் சில பகுதிகயில் வாழும் மக்கள் பாதுகாப்பற்ற நிலை எனக் கருதுகிறார்கள். அவர்கள் துப்பாக்கி உரிமம் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தகுதியுள்ள மக்களுக்கு அரசு துப்பாக்கி உரிமம் வழங்கும். அவர்கள் பூர்வீக குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

துப்ரி, மொரிகான், பர்பேட்டா, நாகோன் மற்றும் தெற்கு சல்மாரா-மன்காச்சர் பகுதிகளில் உள்ளவர்கள் இதுபோன்ற பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த இடங்களில் நம்முடைய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *