சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் விடுவிப்பு 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமனம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சேலம்,மே. 29- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு ஆட்சி குழு கூட் டத்தில் பொறுப்பு துணை வேந்தரை விடுவிக்க முடிவு எடுக்கப்பட் டது. இதையடுத்து 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

துணைவேந்தர் சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 8-ஆவது துணை வேந்தராக ஆர்.ஜெகநாதன் பணியாற்றி வந்தார். இவரது பணிக்காலத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் அமைப்பை வருமானம் பெறும் நோக்கத்தில் தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந் தது. மேலும் தொழிலாளர் சங்க நிர்வாகி ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் துணை வேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டுடன் இவருடைய துணை வேந்தர் பதவி காலம் நிறைவு பெற்ற நிலையில் கூடுதலாக ஓராண்டு அவருக்கு பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

பொறுப்பு துணைவேந்தர்

இவ்வாறு சர்ச்சையில் சிக்கி வந்த துணைவேந்தர் ஆர். ஜெகநாதனுக்கு கடந்த 19-ஆம் தேதியுடன் பணிக்காலம் நிறைவு அடைந்தது. இந்த நிலையில் இவரது ஆதரவாளராக கருதப்படும் தமிழ் துறை பேராசிரியர் பெரியசாமி, பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

இவரை பதவி விலக கோரி தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த பிரச்சி னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று (28.5.2025) பெரியார் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பொறுப்பு துணை வேந்தர் பெரியசாமி தலைமையில் அரசுப் பிரதிநிதிகள், 21 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொறுப்பு துணைவேந்தர் பெரியசாமியை துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.

குழு நியமனம்

இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதில் கல்லூரி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் சுப்பிர மணி, பெரியார் பல்கலைக் கழகத்தில் 22 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மய்ய இயக்குநர் ஆகவும், இதழியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு போராட்டங்களுக்கு இடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆட்சிக்குழு கூட்டம் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *