எங்கள் கூட்டணிமீது பா.ஜ.க.வினருக்கு பெரும் அச்சம் காரணமாக உளறிக் கொட்டுகின்றனர் திருமாவளவன் பேட்டி

viduthalai
1 Min Read

திருச்சி மே 29 தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிர்க்கட்சியினர் உளறிக் கொட்டுகின்றனர் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,

திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது:

பா.ஜ.க – – அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளது. திமுக தலைமையிலான கூட் டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது. அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. இந்த நொடி வரை தமிழ்நாட்டில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது –- அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். திமுக கூட்டணி மீது பாஜகவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார்.கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை.

அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார் அதிலிருந்தே அவர்களுக்குள் முரண் இருப்பது தெரிகிறது. இவ்வாறு தொல். திருவாவளவன் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *