குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தந்தை பெரியாரின் பெயருக்குப் பின் ஜாதி அடையாளமா? தி.மு.க. மாணவரணிச் செயலாளர் இராஜிவ் காந்தி கண்டன அறிக்கை!

2 Min Read

சென்னை, மே 28– தந்தை பெரியாரின் பெயருக்குப் பின் ஜாதி அடையாளம் திணித்துள்ள ஒன்றிய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத் தனமானது; கண்டிக்கத்தக்கது என்று திமுக மாணவர் அணி செயலாளர் இராஜிவ் காந்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை வருமாறு: இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பெயருக்குப் பின்னால் ஜாதியைப் பட்டமாகச் சூட்டிக்கொள்வது அடையாளமாகவும் பெருமிதமாகவும் இன்றளவிலும் இருக்கிறது. ஆனால் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டத்தை நீக்குவதாக அறிவித்தார் தந்தை பெரியார். அவரது ‘குடிஅரசு’ இதழிலும் ஜாதிப் பட்டம் போடப்படுவது நிறுத்தப்பட்டது. அவரைப் பின்பற்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை சூட்டிக் கொள்வதை அவமானமாகக் கருதி விட்டொழித்து விட்டது.

ஜாதியை அவமானமாக, இழிவாகக் கருதிய தந்தை பெரியாரை, அவரது ஜாதியைச் சொல்லி அழைப்பதை மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் செய்வதை சிலர் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர் இப்போதும். பெரியார் சிலைக்கு காவி பூசி அவமதிப்பதைப்போல, பெரியாருக்கு ஜாதிப் பட்டம் பயன்படுத்தினாலும் அவமதிப்பது போலத்தான் என்றே இதைச் செய்கிறார்கள்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் ஜாதி அடையாளம் திணிக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தனி நபர்களோ அல்லது அரசியல் இயக்கமோ தந்தை பெரியாரைத் தூற்றுவது வேறு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யு.பி.எஸ்.சி. தேர்வாணையம் இத்தகைய செயலில் ஈடுபடுவது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இதற்கு முன்பும் இதே தவறை யு.பி.எஸ்.சி. செய்தபோதும் கண்டனங்கள் எழுந்தன. மீண்டும் மீண்டும் இதைச் செய்வது தன்னிச்சையாகவோ அறியாமையினாலோ நடப்பதாகத் தெரியவில்லை.

ஜாதி ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியாரை, மீண்டும் மீண்டும் ஜாதிய வட்டத்திற்குள் அடக்க முயலும் ஒன்றிய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத் தனமானது. கண்டிக்கத்தக்கது. இவ்வாறு திமுக மாணவர் அணிச் செயலாளர் இராஜிவ் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *