விவாகரத்து கோரும் இணையர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான அறிவுரை

1 Min Read

புதுடெல்லி, மே.27- ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளரும், அவருடைய கணவரும் விவாகரத்து வழக்கை சந்தித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, அந்த பெண், தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு. நீதிபதிகள் பி. வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (26.5.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு அந்த இணையருக்கு சுவையான அறிவுரை கூறினர்.

நீதிபதிகள் கூறிய தாவது:-

3 வயது குழந்தையை வைத்துக்கொண்டு உங்களுக்குள் ‘நான்’ என்ற அகங்காரம் எதற்கு?  கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டபடி பேசுங்கள். அதற்கு உச்சநீதிமன்ற உணவகம் நன்றாக இருக்காது. உங்களுக்கு வேறு ஒரு தனிஅறை ஏற்பாடு செய்து தருகிறோம். ஒரு கப் காபியில் எவ் வளவோ சாதிக்கலாம். கடந்த காலத்தை கசப்பு மருந்துபோல் நினைத்து மறந்து விடுங்கள். எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். பிரச் சினைகளை மனம் விட்டுப்பேசி சுமுக தீர்வு காணுங்கள்.

உங்களிடம் ஆக்கப்பூர்வமான முடிவை எதிர்பார்க்கிறோம் குழந் தையுடன் வெளிநாட்டுக்கு பயணம் செய்வது பற்றி இருவரும் பேசி, நாளை அதாவது 27.5.5025 நீதி மன்றத்திற்கு உங்கள் முடிவை சொல்லுங்கள்.  இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *