கழகத் தோழர் இல்ல குடும்ப விழா

1 Min Read

ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக  செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின்  மகன் பெரியார் பிஞ்சு ம.கோ.இளமாறன் அவர்களின் முதலாமாண்டு பிறந்த நாள் விழா 26-05-2025 திங்கட் கிழமை இரவு 07-00 மணிக்கு அவரது இல்லத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக  தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இரா.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி,திருமுல்லைவாயல் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் ,எ.கண்ணன்,அண்ணாநிசார், பகுத்தறிவு, சந்திரபாபு, சுந்தர்ராஜன்   பூந்தமல்லி சந்தோஷ் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *