‘நீட்’டுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

viduthalai
1 Min Read

காஷ்மீர் பெண் தற்கொலை

கோட்டா,மே.27- ராஜஸ்தானின் கோட்டா நகரம், பயிற்சி மய்யங்களின் நகரம் என்று பெயர் பெற் றது. இங்கு படிக்கும் பல மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறி உள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜீஷான் என்ற அந்த மாணவி, கோட்டா நகரில் வாடகை அறையில் தங்கி, நீட் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவர் தனது உறவினர் ஒருவரிடம் போன் அழைப்பில் பேசும்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி உள்ளார்.

உடனே அந்த உறவினர், அங்கு படிக்கும் மற்றொரு மாணவியை தொடர்பு கொண்டு, ஜீஷானை பார்த்து வரும்படி கூறி உள்ளார். அப்போது அந்த மாணவி, ஜீஷான் அறைக்கு சென்றபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மற்றவர்கள் உதவியுடன், கதவை உடைத்து சென்று பார்த்தபோது உள்ளே ஜீஷான் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டில் நடந்த
15-ஆவது தற்கொலை இதுவாகும்.

 

சென்னை அய்.அய்.டி.யில் புதிய படிப்புகள்

சென்னை அய்.அய்.டி.யில் பி.எஸ். வேதியியல், எம்.டெக் எெலக்ட்ரிக் வெகிக்கில்ஸ், பி.டெக். கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்ஸ் பி.டெக். இன்ஸ்ட்ருமெண்டேஷன் மற்றும் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் ஆகிய நான்கு புதிய படிப்புகள் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *