கோண்டா, மே 26 உத்தரப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம், ஏப்ரல் 12 ஆம் தேதி கோண்டா நகரில் நடந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, பாஜக கோண்டா மாவட்டத் தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி தலைமையகத்தின் படிகளில் நின்று கொண்டு ஒரு பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
இந்தக் காட்சிப்பதிவு காட்சிகளின் அடிப்படையில் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர் தலைமைக்குப் புகார் அளித்துள்ளார். இதற்குக் காஷ்யப் இடம் விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை தாக்கீது அனுப்பியுள்ளது.