உலக தைராய்டு நாள் இன்று (மே 25)

2 Min Read

தைராய்டு சுரப்பி என்பது உடலின் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், வளர்ச்சி  போன்ற இயல்பான செயல்பாடுகளுக்குப் பொறுப்பான மிக முக்கியமான உறுப்பு ஆகும்.

தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும், இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனைன் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு பொறுப்பாகும்.

இந்த ஹார்மோன்கள் உடலின் இயல்பான செயல்பாடுகளை பராமரிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதிக்கக்கூடிய நிலைமைகளைப் பற்றி அறியவும் ,மக்களுக்குத் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறும் உலக தைராய்டு நாளானது கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கு பொதுவாகக் காணப்படும் தைராய்டு பிரச்சினைகள்:

பெண்கள் தைராய்டு வகைகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள்

வரலாறு:

மே 25, 1965 இல், அய்ரோப்பிய தைராய்டு சங்கம் நிறுவப்பட்டது. இந்த அமைப்புதான் உலக தைராய்டு நாளை முதன்முதலில் அங்கீகரித்துள்ளது.

2007 ஆம் ஆண்டில், தைராய்டு ஃபெடரேஷன் இன்டர்நேஷனல், ஒவ்வொரு ஆண்டும் மே 25 உலக தைராய்டு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.

அவர்கள் மே 25 அய் அய்ரோப்பிய தைராய்டு சங்கத்தின் ஸ்தாபக நாளை நினைவுகூரும் வகையில் தேர்வு செய்தனர். அப்போதிருந்து, உலக தைராய்டு நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.

முக்கியத்துவம்:

உலக தைராய்டு நாளின் கருப்பொருள் – தொற்றாத நோய்கள் (NCDs). தைராய்டு பிரச்சினைகள் மிகவும் பொதுவான நாளமில்லா கோளாறுகளில் ஒன்றாகும். தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவம் மற்றும் தைராய்டு நோய் உள்ளவர்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் மற்றும் அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது உறுதி செய்வது என்பது குறித்து மருத்துவர்கள் மூலமாக நம்மை நாமே காத்துக்கொள்வதே இந்த சிறப்பு நாளைக் கடைப்பிடிப்பதற்கான சிறந்த வழி.

இந்த நாளில் தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு நாம் ஆதரவைக் காட்டலாம்.  அவர்கள் சரியான சிகிச்சையைப் பெற்று சிறந்த வாழ்க்கையை நடத்துவதை உறுதிசெய்வதில் நம்மால் முடிந்த பணியாற்றலாம்.

எந்த நோயிற்கும் சரியான முறையில் சிகிச்சை அளிக்கும் போது, நோயின் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்தலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *