கரோனா தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார்

1 Min Read

புதுடில்லி, மே 25 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். தொற்று பாதிப்புக்கு தடுப்பூசிகளுக்காக வல்லரசு நாடுகள் தவிர பிறநாடு கள் கையேந்தும் சூழல் ஏற்பட்டது.
அப்போது உள்நாட்டிலேயே கோவேக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் போடப்பட்டது. மேலும் பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தநிலையில் உலகம் முழுவதும் தற்போது புதிய ரக உருமாறிய கரோனா தொற்று பரவுகிறது.
இந்தியாவில் கேரளா, ஒடிசா, கருநாடகாவில் கரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி கள் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுசித்ரா பல்லா கூறுகையில், “புதிய ரக கரோனா பரவல் குறித்து கவனித்து வருகிறோம். அரசு கேட்டுக் கொண்டாலும், நாட்டு மக்களுக்கு தேவைப்பட்டால் தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்க ஆவலாக உள்ளோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *