கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

24.5.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை போராடிப் பெறுவேன், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வேன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேட்டி. 2018-க்குப் பிறகு முதன் முறையாக முந்தைய முதலமைச்சர்கள் எவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அய்போன்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை தடை செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை.

* குஜராத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்: ரூ.71 கோடி மோசடியில் அமைச்சரின் இரு மகன்கள் கைது. குஜராத் அமைச்சர் பச்சுபாய் கபாத் பதவி விலக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராஜஸ்தான் கோட்டா நகரில் உயர்கல்வியில் சேர பயிற்சி பெறும் மாணவர்களின்  தற்கொலைகள் அதிகரிப்பு; ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ கோட்டாவில் மட்டும் குழந்தைகள் ஏன் இறக்கின்றனர்?: அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் குறித்து ராஜஸ்தான் அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

தி இந்து:

* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் புள்ளிவிவரப் பயிற்சி அல்ல, மாறாக இந்திய ஜனநாயகத்தின் “தார்மீக கடமை”. இது குறித்து  செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*மகப்பேறு விடுப்பு அரசமைப்பு உத்தரவாதம், மூன்றாவது பிரசவத்திற்கு அதை மறுக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

.– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *