கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
1 Min Read

24.5.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை போராடிப் பெறுவேன், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வேன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேட்டி. 2018-க்குப் பிறகு முதன் முறையாக முந்தைய முதலமைச்சர்கள் எவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அய்போன்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை தடை செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை.

* குஜராத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்: ரூ.71 கோடி மோசடியில் அமைச்சரின் இரு மகன்கள் கைது. குஜராத் அமைச்சர் பச்சுபாய் கபாத் பதவி விலக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராஜஸ்தான் கோட்டா நகரில் உயர்கல்வியில் சேர பயிற்சி பெறும் மாணவர்களின்  தற்கொலைகள் அதிகரிப்பு; ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ கோட்டாவில் மட்டும் குழந்தைகள் ஏன் இறக்கின்றனர்?: அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் குறித்து ராஜஸ்தான் அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

தி இந்து:

* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் புள்ளிவிவரப் பயிற்சி அல்ல, மாறாக இந்திய ஜனநாயகத்தின் “தார்மீக கடமை”. இது குறித்து  செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*மகப்பேறு விடுப்பு அரசமைப்பு உத்தரவாதம், மூன்றாவது பிரசவத்திற்கு அதை மறுக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

.– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *