‘வாட்ஸ் அப்பில்’ போலியான செய்தி தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

1 Min Read

சென்னை, மே.22– பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூகஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது தேசிய தகவல் மய்யம் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ள ‘PMKISAN Gol என்ற செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ‘APK’ செயலி போலியானது. அதைப் பதி விறக்கம் செய்பவர்களின் கைப்பேசி முடக்கம் (ஹேக்’) செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *