சக்தி யாருக்கு? மின்சாரத்திற்கா? கோயில் சப்பரத்திற்கா? சப்பரம் கட்டும் போது மின்சாரம் தாக்கி 4 பக்தர்கள் உயிரிழப்பு!

1 Min Read

லக்னோ, மே.22- உத்தரப்பிரதேச மாநிலம் காஷிபூர் மாவட்டத்தில் உள்ளது நர்வார் கிராமம். இங்குள்ள கோவில் விழாவில் சப்பரம் கட்டும் பணி நடந்து வந்தது. நேற்று (21.5.2025) அதிகாலையில் பக்தர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு இருந்தபோது, சப்பரம் கட்டும் கம்பி ஒன்று, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியுடன் உரசியதால், அதில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பக்தர்கள் சிலரை மின்சாரம் தாக்கியது. இதில் திருவிழாவுக்கு விடுமுறையில் வந்திருந்த காவல்துறை காவலர் ரவீந்திர யாதவ் (வயது 38), அவரது சகோதரர் அபய் யாதவ் (24), சோடேலால் யாதவ் (35), அமன் யாதவ் (20) ஆகிய 4 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *