சென்னையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்

viduthalai
6 Min Read

மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும்
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 21- மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் நேற்று (20.5.2025) மாலை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்: சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கைகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேராபத்தாகவே உள்ளன.

தமிழ்நாடு

ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட பெரும் பான்மை மக்களின் கண்களை திறந்து விட்டதிலும், கைகொடுத்து தூக்கி விட்டதிலும் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

கல்விக் கண்ணொளி

இடஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கல்விக் கண்ணொளி பெற்று எழுந்து நடமாடும் நிலையில் பார்ப்பனீயத்திற்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு, “நீட்” என்றும், பொருளாதார அளவுகோல் (EWS) என்றும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்து சமூகநீதிக்கு எதிராக குறிப்பிட்ட கல்வியில், வேலைவாய்ப்பு துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். இவற்றை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்காவிட்டால் மீண்டும் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனீய ஆதிக்கம் என்ற யானையின் காலில் மிதிக்கப்பட்டு நசுங்க வேண்டிய அவல நிலைதான் ஏற்படும்.

மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கும்

நீட் தேர்வில், தற்கொலைகள் தொடர்வதும், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுவதும் நாளும் தொடர்கதையாகி வருகிறது. மருத்துவக் கல்வியையும், கட்டமைப்பையும் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு முறை நிறைவேற்றி அனுப்பப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் விரோதமானவையாகும்.

நீட் தேர்வு ஒழிப்புப் போர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இறுதி வெற்றி கிட்டும் வரை சற்றும் ஓயாமல், அயராமல் போராடி, நீட்டை ஒழித்து சமூக நீதியையும் மாநில உரிமையையும் மீட்கவும், மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும், ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிப்பதைக் கண்டித்தும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என கடந்த 11.5.2025 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது என துணைத் தலைவர் உரையாற்றினார்.

இதன்படி நேற்று (20.5.2025) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று (20.5.2025) மாலை 4 மணியளவில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு.

மாவட்ட செயலாளர்கள் புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன்ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட முழக்கம்

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் களம் இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக் ஆகியோர் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

காப்போம்! காப்போம்! சமூகநீதியைக் காப்போம்! ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை காப்போம்! மீட்போம்! மீட்போம்! ஒன்றிய அரசால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்போம்!

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்! ஹிந்தியை சமஸ்கிரு தத்தையும் திணிக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறோம்.

ஏற்கமாட்டோம்! ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம். கை வைக்காதே கை வைக்காதே!  கை வைக்காதே! இருமொழிக் கொள்கையில் கை வைக்காதே!

சிதைக்காதே சிதைக்காதே! இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்காதே! தேசிக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் காவிக் கொள்கையைத் திணிப்பதா? தனியார் மயத்தை வளர்ப்பதா? சமூகநீதியைப் பறிப்பதா?

குலத்தொழில் செய்ய ஆசை காட்டும் விஸ்வகர்மா போஜனா, பார்ப்பனியத்தை ஆள வைக்கும் மனுதர்ம யோஜனா, அய்ந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கட்டாயமாம்! பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் குலக்கல்விக்குப் பட்டாவாம்.

கொண்டுவா கொண்டுவா! கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா! ஒழித்துக் கட்டுவோம் ஒழிக்கட்டுவோம்! தேசியக் கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

போராடுவோம் வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!  – போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பொறியாளர் தேவ.நர்மதா இணைப்புரை வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

வடசென்னை: கி.இராமலிங்கம், தி.செ. கணேசன், வழக்கு ரைஞர் மு.வேலவன், கோ. தங்கமணி, பா. கோபாலகிருட்டிணன், ச. இராசேந்திரன், சி.பாசுகர், நா. பார்த்திபன், கண்மணிதுரை, ஆ. துரைராவணன், ஏ. மோகன், பா. பார்த்திபன், ந. கார்த்திக், த. பரிதின், ச. சஞ்சய், சி. செல்லப்பன்.

தென்சென்னை:  கரு. அண்ணாமலை, டி.ஆர். சேதுராமன், ந. மணிதுரை, பெரியார் யுவராஜ், சா. தாமோதரன், ச. மகேந்திரன், இரா. மாரிமுத்து, கோ.வீ. ராகவன், எம்.டி.சி. இராஜேந்திரன், நல். இராமச்சந்திரன், நுங்கம்பாக்கம் சஞ்சய், மு. சண்முகப்பிரியன், டைலர் கண்ணன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு. மோகன்ராஜ், பொழிசை, க. கண்ணன், பாலமுரளி, அரசன்கழனி குணசேகரன், மா. குணசேகரன், பழனிசாமி, சு.ம. இராமச்சந்திரன், இரா. உத்திரகுமாரன், கேளம்பாக்கம் லட்சுமணன், தனசேகர்.

ஆவடி மாவட்டம்: மு. ரகுபதி, க. தமிழ்ச்செல்வன், இரணியன் (எ) அருள்தாஸ், அ.வெ. நடராசன், துரை. முத்து கிருஷ்ணன், பூ. இராமலிங்கம், முரளி, ஜெயராமன், இரா. கோபால், எ. கண்ணன், கு. சங்கர், அரிகிருஷ்ணன், வி. சோபன்பாபு, சி. வஜ்ரவேல், பெரியார்மாணாக்கன், அய். சரவணன், வெங்கடேசன், வேல்சாமி, சந்திரபாபு, உடுமலை வடிவேல், வை. கலையரசன், வேல்முருகன், தங்கதுரை, இ. தமிழ்மணி.

கும்முடிபூண்டி மாவட்டம்: புழல் சோமு, வடகரை உதயகுமார்,  ஓவியர் ஜனாதிபதி, கசேந்திரன், சோழவரம் ப. சக்கரவர்த்தி, க.ச.க. இரணியன், செகத விஜயகுமார், அய். அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய தலைவர்), அ. ஆகாஷ் (மா.இ. அணி செயலாளர்), அ. கலையரசன் (இளைஞர் அணி).

திருவொற்றியூர் மாவட்டம்:  பெ. செல்வராசு, எம்.ஆர்.எப். சேகர், இராவணன், சத்தீஷ்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்:  தமிழ் இனியன், அரசு, கலைச்செல்வன், குணசேகரன், பி.சி. ஜெயராமன்.

கழக மகளிரணி: சி. வெற்றிச்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன், தங்க தனலட்சுமி (பொதுக்குழு உறுப்பினர்), ச. இன்பக்கனி, டி. இளவரசி, த. திராவிடஎழில், த.யாழ்தமிழ், ஞானதேவி, கனிமொழி, த. தேவி, மோ. மீனாட்சி, மு. பவானி, கோ. குமாரி, தெய்வானை, ராதிகா, சி. அறிவுமதி, பூவை செல்வி, இ.ப. சீர்த்தி, சீ.ப. மகிழன், அன்புச்செல்வி, பகுத்தறிவு, யாழினி மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தோழர்கள் ஜெ. ஜனார்த்தனம், சோமசுந்தரம், மு.இரா. மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *