இன்றைய நெருக்கடியும் தீர்வும் – கருத்தரங்கம்

1 Min Read

ஆவடி, மே 21- ஆவடி பெரியார் மாளிகையில் 18.5.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்  தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற உண்மை வாசகர் வட்ட கூட்டத்தில் செயலாளர் க.கார்த்திகேயன் அறிமுக உரை  ஆற்றிட, மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் வர வேற்புரையாற்றினார்.

மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலை வகித்தார். ஊடகவியலாளர் கரிகாலன் ‘இன்றைய நெருக்கடியும் தீர்வும்’ என்ற தலைப்பில் இந்தியா- பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் தலையீடு பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் செயல்பாடு, அதைத் தகர்க்க எவ்வாறு செயல்பட்டுத் தீர்வு காண வேண்டுமென எழுச்சியுரையாற்றினார்.

ஜானகிராமன் மற்றும் பேச்சாளர் கா.மு.ஜான், ஆவடி புருசோத்தமன் ஆகியோர் ஊடகவியலாளர் கரிகாலனுக்குப்  பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். நிகழ்வில் மாவட்ட, இளைஞரணி, மகளிரணி, பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து இயக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இறுதியாக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *