புதுடில்லி, மே 18 பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதத் திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மற்றும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத் துரைப்பதற்காக, ஒன்றிய அரசு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஏழு நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழுக்களை அமைத்துள்ளது.
எல்லை தாண்டிய தீவிர வாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற் கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
இதற்காக, அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத், வைஜெ யந்த் பாண்டா (பாஜக), சசி தரூர் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), சஞ்சய் குமார் ஜா (அய்ஜத), சுப்ரியா சுலே (என்சிபி – சரத்பவார்), சிறிகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அந்த குழுக்களுக்கு தலைமை வகிப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல், அய்ஜத, என்சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார். இந்த குழுக்களின் ஒருங் கிணைப்பாளராக நாடாளு மன்ற விவகார துறை அமைச் சர் கிரண் ரிஜிஜு இருப்பார்.
பொய் பிரச்சாரங்கள்
இந்த குழுவினர் பிரிட்டன், அய்க்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணம் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகள், பஹல்காம் தாக்குதலின் பின்னணி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பொய் பிரச்சாரங்கள் ஆகியவை குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் எம்.பி.க்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைப்பார்கள்.
ஆவணங்களாக…
இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு, இதில் அந்த நாட்டின் ராணுவம், உளவு அமைப்பான அய்எஸ்அய் ஆகியவை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான முழு ஆதாரங் களை வெளியுறவு துறை, நாடாளுமன்ற விவகார துறை, உள்துறை அமைச்சகங்கள் இணைந்து ஆவணங்களாக தயாரித்து வருகின்றன. எம்.பி.க்கள் குழுவினரிடம் இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் உலக நாடுகளின் தலைவர் களுக்கு இந்திய எம்.பி.க்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
கனிமொழி தலைமையில்…
இந்த ஏழு குழுக்களில் ஒரு குழுவிற்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமை தாங்குகிறார். கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவே னியா, லாத்வியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தக் குழுக்கள் இந்த மாதம் (மே) 22 அல்லது 23 தேதிகளில் தங்கள் பயணத்தைத் தொடங்கும் என்றும், சுமார் 10 நாட்கள் வெளிநாடுகளில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுக்களின் முக்கிய நோக்கம், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும், பயங்கரவாதத்திற்கு எதி ரான இந்தியாவின் உறுதியான நடவடிக்கை களையும் பல்வேறு நாடுகளிடம் விளக்கி, இந்தி யாவின் நிலைப்பாட்டிற்கு உலக நாடுகளின் ஆதர வைத் திரட்டுவதாகும்.