சென்னை, மே 18- தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27ஆம் தேதி ஆகும். இதேபோல் பொறியியல் படிப்புக்கான இணையவழி விண் ணப்ப பதிவும் வேகமாக நடந்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங் கிய இந்த விண்ணப்பபதிவில் 15.5.2025 வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.