காஞ்சிபுரம், மே 16 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவத்தில் மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 5ஆம் நாள் உற்சவத்தில் பல்லக்கில் வீதி உலா சென்றபோது வடகலை – தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பல்லக்கு வந்தபோது பாராயணம் பாடுவதில் வடகலை-தென்கலை இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து பல்லக்கை நடுரோட்டில் நிறுத்தி விட்டு வடகலை – தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து 15 நிமிடங்களுக்குப் பின் சாமி புறப்பாடு நடைபெற்றது.
சந்தி சிரிக்கிறது காஞ்சிபுரத்தில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் சண்டை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
