ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை பெற்றிட தமிழ்நாட்டுடன் இணைந்து சட்ட நடவடிக்கை

1 Min Read

கேரள கல்வித்துறை அமைச்சர் பேட்டி

திருவனந்தபுரம், மே. 15- பள்ளிகளில் கல்வியின் தரத்தை யும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது தொடர் பாக கடந்த 2022-ஆம் ஆண்டு, ‘பிரதான் ஒன்றிய ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா’ (பிஎம்சிறீ) என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.  மேலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடவில்லை. இதனால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியுதவிகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக கேரள பொது கல்வித்துறை அமைச் சர் சிவன் குட்டி 13.5.2025 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

ஒன்றிய அரசின் பிஎம்சிறீ திட் டத்தை கேரளாவில் அமல்படுத் தாததால், பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்க வேண் டிய ரூ.1,500 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதனை பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சியில் தமிழ் நாட்டுடன் இணைந்து கேரள அரசு ஈடுபடும்.

“தேசிய கல்வி கொள் கையை அமல்படுத்த மாநிலங்கள் எந்த சட்டப் பூர்வ கட்டாயத்திற்கும் உட்பட்டவை அல்ல’ என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இது கேரளா தனது நிதி உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகு வதற்கான வழிகாட்டியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *