காஷ்மீரில் சுவரொட்டி ஒட்டிய காவல்துறை

1 Min Read

சிறீநகர், மே 15- பெஹல்காமில் 26 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காஷ்மீரில் காவல் துறையினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

பயங்கரவாதிகள்

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலமான பைசரன் புல்வெளி மைதானத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவம், பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

தகவலுக்கு ரூ.20 லட்சம் பரிசு

இதன் ஒரு பகுதியாக பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தே கிக்கப்படும் ஆசிப் பவுஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகியோரின் உருவப் படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் காவல் துறையினர் ஒட்டியுள்ளனர். இவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற பெயர்களில் பயங்கரவாத செயல் களில் ஈடுபட்டு வந்ததாக அறியப்படுகிறது.

உருது மொழியில் ஒட்டப்பட்டு இருந்த அந்த சுவரொட்டியில், பயங்கரவாதத்துக்கு இந்த மண்ணில் இடம் இல்லை. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *