செம்மொழி நாள் போட்டிகள் மாணவா்களுக்கு பரிசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 14- தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளினை செம்மொழி நாளாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டத்துக்கான இலக்கியப் போட்டிகள் சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

இப்போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் சென்னை அசோக் நகா் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ம.ஜெ.அக்ஷயா – முதலிடம், சிறீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவா் மு.க.தா்ஷன் – இரண்டாமிடம், விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செள.நசிஹா பானு மூன்றாமிடம் பெற்றனா்.

அதேபோன்று பேச்சுப் போட்டியில் திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சீ.தனுசிறீ – முதலிடம், தண்டையார்பேட்டை முருகதனுஷ்கோடி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி வே.நெ.நைட்டிங்கேல் நிஷா – இரண்டாமிடம், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.ஆா்த்தி மூன்றாமிடம் பெற்றனா்.

இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அவ்வை ந.அருள் வழங்கினார்.

38 மாவட்டங்களிலும் முதல் பரிசு பெற்ற மாணவா்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மே 17-ஆம் தேதி மாநிலஅளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *