மும்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திராவிட கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் 134ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பிறந்த நாளை உலக தமிழ் வாரமாக அறிவித்த மாநில சுயாட்சி நாயகர், நமது உரிமையினை மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் போராடிப் பெற்றுத் தந்த தி.மு.கழகத் தலைவருக்கு நன்றி பாராட்டும் விழா 11.05.2025 அன்று இரவு 7 மணிக்கு மும்பை திமுக பொறுப்புக்குழு தலைவர் ம.சேசுராசு தலைமையில் தாராவியில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.
பொறுப்புக்குழு உறுப்பினர். ம.நீதிதுரை வரவேற்புரையாற்றினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் க.மு.மாணிக்கம், அன்பழகன் பொற்கோ, ஆகியோர் முன்னிலை வகிக்கித்தார்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் படத்தை பம்பாய் திருவள்ளுவர் மன்றம் மற்றும் கலைஞர் தமிழ்ச் சங்கம் செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன், மராத்திய மாநில விசிக அமைப்புச் செயலாளர் சாலமோன் ராசா, மும்பை பகுத்தறிவாளர் கழகம் தலைவர் அ.ரவிச்சந்திரன், மற்றும் ஆ.பாலசுப்பிரமணியன், இரா.மதியழகன், எஸ்.பி.செழியன், பேலஸ்துரை, அப்துல் திவான் மைதீன், வே.ரவிச்சந்திரன், சேரை ச.பிரகாஸ், எம்.ராஜன் (Rdo), சுப.காளிமுத்து, அ.கண்ணன், சங்கர் திராவிட், பொய்சர் க.மூர்த்தி, பி.எஸ்.அழகுராஜா, கிருஸ்ணமூர்த்தி, பெருமாள், செல்வி க.அறிவுமதி,செந்தமிழரசி,அறிவுமலர் ஆகியோர் உரையாற்றினார்கள்
மும்பை இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன் சிறப்புரையாற்றினார். தாராவி திமுக பிரமுகர் ஆர்.ரவிரஜினி நன்றி கூறினார்.