டில்லியில் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அகற்றம்

viduthalai
0 Min Read

புதுடில்லி, மே 13 டில்லியில் தமிழர்கள் வசிக்கும் ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்புவாசிகள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பிரதீபா எம்.சிங், மன்மீத் பி.எஸ்.அரோரா அடங்கிய அமர்வு விசாரித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வருகிற 20ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மதராசி கேம்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் நரேலாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *