புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில் ‘சுயமரியாதை இயக்கமும் – மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம், புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மு.ரா. மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ’ எனும் புத்தகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டது. தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (சென்னை – 12.5.2025)