அணு ஆயுதத்தாலும் அழிக்க முடியாத உயிரினம்

1 Min Read

ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த அனைத்து உயிர்களும் இறந்தன. ஆனால், கரப்பான் பூச்சிகள் மட்டும் சாகவில்லை. பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பார்த்ததில், மனிதர்கள் 800 ரேடுகள் அளவிலான அணு ஆயுத கதிர்வீச்சை தாங்கும் சக்தி கொண்டிருக்கும் நிலையில், கரப்பான் பூச்சி 10,000 ரேடுகள் அளவிலான கதிர்வீச்சை தாங்கும் திறன் கொண்டதை கண்டறிந்தனர்.

 

சு.சாமிகள் எதையும் பேசலாமோ!

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு 2 நாள்களில் சண்டையை நிறுத்தி  பிரதமர் மோடி தவறு செய்துவிட்டதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு எனவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 26 பேரை கொன்ற 4 பேரை பாகிஸ்தான் ஒப்படைக்கும் வரை சண்டையை நிறுத்தியிருக்க கூடாது என ஆவேசமாக கூறியுள்ளார்.

 

இந்தியா – பாக்., அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: டிரம்ப்

இந்தியா, பாக்., இடையே ஏற்பட விருந்த அணுஆயுதப் போரை, அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சண்டையை நிறுத்தாவிட்டால், வர்த்தகம் செய்ய மாட்டோம் என இரு நாடுகளையும் எச்சரித்ததாக கூறியுள்ள டிரம்ப், சண்டை நிறுத்தம் ஒன்றே தீர்வு என கூறியதாலேயே இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன என்றார். அணு ஆயுதப்போரால் லட்சக்கணக்கானோர் பலியாவதை தடுத்தது பெருமை என்றும் அவர் கூறினார்.

 

 சட்டம் படிக்க ஆசையா?

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உள்பட மொத்தம் 13 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளும், 12 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.  மொத்தமாக தமிழ்நாடு கல்லூரிகளில் 3,024 இடங்கள் உள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *