பாகிஸ்தானுடன் மோதலின்போது மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே.13- பாகிஸ்தானு டனான மோதலின்போது மூடப் பட்ட 32 விமான நிலையங்கள் நேற்று (12.5.2025) மீண்டும் திறக்கப்பட்டன.

32 விமான நிலையங்கள்

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் பாதிக்கப்பட்டன. வான்வழிகள் மூடப்பட்டன.

இந்திய எல்லைப்பகுதிகளின் அருகில் உள்ள விமான நிலை யங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் எனக்கருதி அந்த விமான நிலையங்கள் மூடப் பட்டன. குறிப்பாக ஜம்மு, சிறீநகர், லே, ராஜ்கோட், பதான்கோட், பஞ்சாபின் அமிர்தசரஸ் உள்பட 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. 15-ஆம் தேதி வரை இவை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி மாலை ராணுவ மோதல் முடிவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து வான்வழிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன.

மீண்டும் திறப்பு

இதனைத்தொடர்ந்து நேற்று அந்த 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. தற்காலிக மூடல் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இருப்பினும், பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விமானப் போக் குவரத்து நிலையைச் சரிபார்க்கவும், வழக்கமான புதிய தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் வலைத் தளங்களைக் கவனிக்குமாறும் அறி வுறுத்தப்பட்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *