20 நாடுகளில் 79 தொடர்பு மய்யங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, மே 12- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அண்மையில் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பல்வேறு பாடத் திட்டங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியான சான்றிதழ் படிப்புகளில் 18,968 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், தமிழியல் தொடர்பான பட்டயப்படிப்பில் 2,679 பேர், மேற்பட்டயப் படிப்பில் 2,151 பேர், பட்டப்படிப்பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அயலக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர்.

தமிழ் மொழியை 2ஆம் அல்லது 3ஆம் மொழியாக பயிலும் அயலகத் தமிழர்களுக்கு பயிற்றுவிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டு, 2022-2023, 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண் டில் 19 நாடுகளில் 110 தொடர்பு மய்யங்களுடன் செயல்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகம், தற்போது 39 நாடுகளில் 189 மய்யங்களுடன் செயல் பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20 நாடுகளில் 79 தொடர்பு மய்யங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *