20 நாடுகளில் 79 தொடர்பு மய்யங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

1 Min Read

சென்னை, மே 12- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அண்மையில் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பல்வேறு பாடத் திட்டங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியான சான்றிதழ் படிப்புகளில் 18,968 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், தமிழியல் தொடர்பான பட்டயப்படிப்பில் 2,679 பேர், மேற்பட்டயப் படிப்பில் 2,151 பேர், பட்டப்படிப்பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அயலக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர்.

தமிழ் மொழியை 2ஆம் அல்லது 3ஆம் மொழியாக பயிலும் அயலகத் தமிழர்களுக்கு பயிற்றுவிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டு, 2022-2023, 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண் டில் 19 நாடுகளில் 110 தொடர்பு மய்யங்களுடன் செயல்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகம், தற்போது 39 நாடுகளில் 189 மய்யங்களுடன் செயல் பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20 நாடுகளில் 79 தொடர்பு மய்யங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *