குவாலியர், மே 12- மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளை வளாகத்தில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் (பார் அசோசியேஷன்) பீடம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்களை வீசினர்.
பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் சிலையை நீதிமன்றத்தின் முன்பு வைக்க அனுமதி அளித்தது தவறு என்றனர்.
தடை ஏதும் இல்லை
இந்த நிலையில் குவாலியர் நீதிமன்ற இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், சிலை நிறுவப்படவேண்டும் இதற்கு நீதிமன்றம் எந்த விதத்திலும் தடை உத்தரவு விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பொருட்களை சேதப்படுத்த முயன்ற உயர்ஜாதி வழக்குரைஞர்களை எதிர்த்து பெண் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிலை பீடம் அமைக்கும் இடத்தில் உள்ள கட்டுமானப் பொருட்களை சிதைக்கும் உயர்ஜாதி வழக்குரைஞர்களோடு போராடும் பெண் வழக்குரைஞர்களும், நீதிமன்ற பெண் ஊழியர்களும்…